உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

உயிருக்கு ஆபத்தான தெருநாய்கள் கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை

கரூர்: கரூரில், தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 48 வார்டுகளில் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் அவற்றின் தொல்-லையும் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த, திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தெரு நாய்கள் இரவு, பகலாக சுற்றித்திரிகின்றன. பொதுமக்கள், கால்நடைகளை கடித்தும் வருகின்றன. சாலைகளின் மைய தடுப்புச்சு-வரின் இடைவெளி வழியாக, திடீரென குறுக்கே ஓடும் நாய்-களால், வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தெரு நாய்கள் ஹாயாக சுற்றித்திரிந்து அங்கேயே தங்கி விடுகின் றன. நாய்-களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ