வனக்கோட்டம் சார்பில் பிளாஸ்டிக் அகற்றம்
கரூர், கரூர் வனக்கோட்டம் சார்பில், கடவூர் பொன்னணி அணை பகுதி களில், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணிகள் நடந்தன.இப்பணியை, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பிறகு, வனப்பகுதியில் துாய்மை காக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சண்முகம், வனச் சரக அலுவலர் அறிவழகன், கடவூர் தாசில்தார் சவுந்திரவள்ளி, வி.ஏ.ஓ., சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.