மேலும் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
24-Apr-2025
கரூர்: கரூர் அருகே, திருமணம் செய்துகொள்வதாக கூறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை, போக்சோ சட்டத்தில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் அஜித்குமார், 23; இவர் கடந்த, 2024 மார்ச், 13ல், 17 வய-துடைய சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி காதலித்-துள்ளார். பின், சிறுமிக்கு அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், அஜித்குமார் கடந்த, 16ல் வேறு ஒரு பெண்ணை திரு-மணம் செய்துகொண்டார். இதுகுறித்து, சிறுமி அளித்த புகார்படி, கரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
24-Apr-2025