சிறுமியை திருமணம் செய்த எலக்ட்ரீஷியன் மீது போக்சோ
'கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை ஆர்.டி.,மலையை சேர்ந்தவர் சக்-திவேல் மகன் சண்முகம், 21; எலக்ட்ரீஷியன். இவர் கடந்த, 2022 ஜூலையில், 15 வயதுடைய சிறுமியை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.தற்போது, எட்டு மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமி, திருச்சி அரசு மருத்துவமனையில் ரத்த குறைபாட்டால் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, கரூர் மகளிர் போலீசார் சண்-முகம் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.