மேலும் செய்திகள்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
07-Aug-2025
கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆவணி மாத பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை, 4:30 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.தொடர்ந்து, மூலவர், நடராஜர் மற்றும் நந்தி சிலைக்கு நடந்த மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* குளித்தலை, கடம்பவனேஸ்வரர் கோவில் நந்தீஸ்வரருக்கு தேன், பன்னீர், இளநீர், சந்தனம், பால், பழங்கள் மற்றும் திரவியங்களால், கந்தசுப்பிரமணிய குருக்கள் அபிஷேகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.இதேபோல், குளித்தலை அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வர், மேட்டு மருதுார் ஆராமுதீஸ்வரர், மருதுார் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்பட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
07-Aug-2025