உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு

சொத்து தகராறு; தம்பதி மீது வழக்கு

குளித்தலை: குளித்தலை அடுத்த கீழமடை மாணிக்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தேக்கன், 36; கூலித்தொழிலாளி. இவரது தங்கை ரேவதி. இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. கடந்த, 1ல், தேக்கன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த ரேவதி, இவரது கணவர் செல்லாண்டி ஆகிய இருவரும், சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், தேக்கனின் தந்தை நடேசன், தாய் ஜெயா உள்ளிட்டோரை தாக்கி உள்ளனர். காயமடைந்த தேக்கன், நடேசன், ஜெயா ஆகிய மூவரும், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இதுகுறித்து தேக்கன் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார், செல்லாண்டி, ரேவதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி