மக்கள் குறைதீர் முகாமில் நலத்திட்ட உதவி வழங்கல்
கரூர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர் முகாமில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நான்கு பயனாளிகளுக்கு, 8,770 ரூபாய் மதிப்பில் காதொலி கருவி, ஊன்று கோல்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.டி.ஆர்.ஓ., கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்தி கங்காதரன் உள்பட, அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.