உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை

பயனற்ற நிலையில் கழிப்பிடம் பொதுமக்கள் கடும் அவஸ்தை

பயனற்ற நிலையில் கழிப்பிடம்பொதுமக்கள் கடும் அவஸ்தைகரூர், டிச. 26-கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாநகராட்சி, திருச்சி பழைய சாலை எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. அதை, கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாதபடி அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளது. இதனால், கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், எஸ்.வெள்ளாப்பட்டி பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ