ரங்கநாத சுவாமி கோவில் 5ம் நாள் ராப்பத்து உற்சவம்
ரங்கநாத சுவாமி கோவில்5ம் நாள் ராப்பத்து உற்சவம்கரூர்:கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், நேற்று ஐந்தாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது.கரூரில், பிரசித்தி பெற்ற அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த, 31ல், வைகுண்ட ஏகாதசி திருவிழா, பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. கடந்த, 9ல், இரவு மூலவர் மோகினி அலங்காரம் மற்றும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 10ல் சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, நாள்தோறும் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. நேற்று, ஐந்தாம் நாள் ராப்பத்து உற்சவம் நடந்தது. அதில், வேணுகோபால கிருஷ்ணன் வேடத்தில், உற்சவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.