உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனைq

ரஸ்தாளி வாழைத்தார் ரூ.350க்கு விற்பனைq

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில், விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.முகூர்த்த தினம் என்பதால் வாழைத்தார் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில் ராஸ்தாலி தார், 350 ரூபாய், பூவன் தார், 320 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை