கர்ப்பிணிகள் ஆலோசனை பெற மொபைல் எண் வெளியீடு
கர்ப்பிணிகள் ஆலோசனை பெறமொபைல் எண் வெளியீடுகரூர், நவ. 8-கர்ப்பிணிகள் தேவையான ஆலோசனை பெற, மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் அலுவலகத்தில் தாய் சேய் நலனை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தாய் சேய் நலம் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மையத்தின் வாயிலாக கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கும் தேவையான ஆலோசனை மற்றும் தொடர் பராமரிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு, 9342238410, 9342216978, 9363209897, எண்களில் மற்றும் gmail.com ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.