உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

கோடை மழை துவங்கும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார கோரிக்கை

கரூர்:கரூர் நகரில், கோடை மழை பெய்ய துவங்கும் முன், சாக்கடை கால்வாய்களை துார்வார வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழை பெய்த போது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னரில் சாக்கடை கழிவு கலந்த தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் சாலைகளில், கார், இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கரூர் நகரில் கடந்த, 10 நாட்களாக கோடைக்காலத்தையொட்டி, வெயில் சுட்டெரித்து வருகிறது. தமிழகத்தில் கோடைமழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கரூர் நகரில் கோடை மழை பெய்யும் போது, மழை நீர் சாலைகளில் தேங்கும் அபாயம் உள்ளது. கரூர் நகரில் உள்ள சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்கள் ஆகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை. கரூர் மாவட்டத்தில், கோடை மழை பெய்யும் முன், கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார் வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ