உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்

சிதிலமடைந்த குளங்களை துார்வார வேண்டுகோள்

அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பகுதிகளில், சிதிலமடைந்த குளங்களை மழை காலத்திற்குள் துார்வார விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகம்பள்ளி, கொடையூர், வெஞ்சமாங்கூடலுார், புங்கம்பாடி மேல் பாகம், கீழ் பாகம், கோவிலுார், எருமார்பட்டி, ஈசநத்தம், அம்மாபட்டி, ஜமீன் ஆலமரத்துப்பட்டி, வேலம்பாடி, சாந்தப்பாடி, சேந்தமங்கலம் கீழ் பாகம், மேல் பாகம் உள்ளிட்ட 18 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சிறு சிறு குளங்கள் உள்ளன. மேலும் நெல்லிக்கோம்பை, சாந்தப்பாடி, அஞ்சாகவுண்டனூர் ஆகிய கிராமங்களில் சற்று பெரிய குளங்களும் உள்ளன.மழை காலங்களில் பெய்யும் மழை நீர், குளங்களில் தேங்கி நிற்பதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளின் கிணறுகள், வீடு, தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்கிறது. இதனால், சுற்றுவட்டார பகுதியில் வசிப்பவர்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகும். ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட குளங்கள் சிதிலமடைந்து நீர் இல்லாமல் மழை காலங்களில் பெய்யும் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது நீர் இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கும் குளங்களை, மழை காலத்திற்குள் துார்வார விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை