உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் புதிய சிறுபாலத்தில் பள்ளத்தால் விபத்து அபாயம்

கரூரில் புதிய சிறுபாலத்தில் பள்ளத்தால் விபத்து அபாயம்

கரூர் : கரூரில் சாலையின் குறுக்கே, சிறுபாலம் கட்டிய இடத்தில், வெளியே தெரியும் இரும்பு கம்பிகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் நரசிம்மபுரத்தில் சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன்பு, சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வீடுகள் மற்றும் மாநகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளி உள்ளது. தற்போது சிறுபாலத்தில் பள்ளம் ஏற்பட்டு, கான்கிரீட் அமைக்க போடப்பட்ட இரும்பு கம்பிகள், வெளியே தெரியும் நிலையில் உள்ளது. இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. அந்த சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அப்போது பள்ளத்தில் உள்ள நீட்டிய, இரும்பு கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக, இரவு நேரத்தில் சிறுபாலத்தில், உள்ள பள்ளத்தில், தவறி விழுந்து நீட்டிய நிலையில் உள்ள, கம்பிகள் மூலம் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நரசிம்மபுரத்தில் சாலையின் குறுக்கே உள்ள, சிறுபாலத்தில் பள்ளத்தை மூடி, சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி