உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 ஆட்டை: 2 பேர் கைது

அதிகாரிகள் போல் நடித்து ரூ.50,000 ஆட்டை: 2 பேர் கைது

எலச்சிபாளையம்: வெண்ணந்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று முன்தினம் மாலை இருவர் பொலீரோ காரில் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்-கொண்டு, சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து வெண்ணந்துார் போலீசார் விசாரணை நடத்ததினர்.அப்போது, சேலம் மாவட்டம், பழனிசாமி நகர், சன்னியாசி-குண்டு பகுதியை சேர்ந்த அய்யனார், 42, சேலம் மாவட்டம், தெற்-குகாடு, வெள்ளாளகுண்டம் ரவி, 41, என்பதும் தெரியவந்துள்-ளது.மேலும், கடந்த, 18ல், மல்லசமுத்திரம் அருகே நாகர்பாளை-யத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் நாங்கள் அரசு அதிகா-ரிகள் என கூறிக்கொண்டு அதன் உரிமையாளர் சோமசுந்தரத்-திடம் ரேஷன் அரிசி பயன்படுத்துவதாக கூறி மிரட்டி, 50,000 ரூபாய் பெற்றுசென்றது ஒப்புக்கொண்டனர்.இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்ய அந்த இருகுற்றவாளிக-ளையும் எலச்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்-தனர். எலச்சிபாளையம் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி