ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
கரூர் :தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாநில துணைத்தலைவர் காளிதாசன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.அதில், பஞ்சாயத்து செயலாளர் உள்ளிட்ட, நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட பொதுச்செயலாளர் வடிவேலன், செயலாளர் கலாராணி, நிர்வாகிகள் கோமதி, மாலதி, தினேஷ் பாபு, நடராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.