உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை

லாலாப்பேட்டை மண்டியில்வாழைத்தார்கள் விற்பனைகிருஷ்ணராயபுரம், நவ. 29-லாலாப்பேட்டை, கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் ஆகிய இடங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ஆகிய ரக வாழைத்தார்கள் சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரஸ்தாளி வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், பூவன் வாழைத்தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ