உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு

கரூரில் ஊழல் ஒழிப்பு குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு

கரூர்:கரூர் மாவட்டத்தில் ஊழல் ஒழிப்பு குறித்து, புகார் தெரிவிக்க, தனி வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கரூர் எஸ்.பி., அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் காவல் துறை தலைமை இயக்குனர் உத்தரவின்படி, ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலும், ஊழல் ஒழிப்பு குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்க, தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 88077-09299 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்