உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர்-கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் அவதி

கரூர்-கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவுநீரால் அவதி

கரூர், கரூர் அருகே, சாலையில் கழிவுநீர் நேற்று காலை ஆறாக ஓடியதால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.கரூர்-கோவை சாலையில் குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது. இந்நிலையில், பல நாட்களாக கரூர்-கோவை சாலை, 80 அடி சாலை பிரிவில் சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுநீர் வெளியேறி, சேலம் சாலையில் ஆறாக ஓடியது. அப்போது, துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனால், கரூர் மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை