உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை

பசுபதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை

கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத கிருத்திகையையொட்டி, மூலவர் முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பின், சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, மயில் கருட வாகனத்தில் வள்ளி, தெய்வானை உடனான முருக பெருமான், கோவில் பிரகாரத்தில் உலா வந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவில், பாலமலை பாலசுப்பிரமணியர் கோவில், வெண்ணைமலை பாலசுப்பிரமணியர் கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில்களிலும் சித்திரை மாத கிருத்திகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை