உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிந்தலவாடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை

சிந்தலவாடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து பழைய நெடுஞ்சாலை அருகில், வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் சாலை அருகில், பஞ்சாயத்தில் உள்ள குப்பை கொட்-டப்படுகிறது.இங்குள்ள கழிவு பொருட்களை சாப்பிடுவதற்காக, தெரு நாய்கள் கூட்டமாக சாலையோரத்தில் சுற்றி திரிந்து வருகிறது.சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை, சில நேரங்களில் நாய்கள் துரத்தி வருவதால், தடுமாறி விழுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி