முருங்கை, மஞ்சள் ஏற்றுமதிக்கு மானியம்; கலெக்டர் தகவல்
கரூர்: விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தங்-களின் விளை பொருள்களை ஏற்றுமதி செய்ய மானியம் வழங்கப்-படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்-காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றை பயிரிடும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விளை பொருள்-களை ஏற்றுமதி செய்வதற்கு, 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. ஏற்றுமதியில் ஆர்வம் உள்ளவர்கள், இத்திட்-டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவலுக்கு வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) மொபைல் எண் 94425--56138 மற்றும் வேளாண் அலுவலர்களின், 95004--16678, 99422--86337, 94895--08735 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.