உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்டத்தில் 347.61 மி.மீ., மழை பெய்தது: கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் 347.61 மி.மீ., மழை பெய்தது: கலெக்டர் தகவல்

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், நடப்பு செப்டம்பர் மாதம் வரை, 347.61 மி.மீ., மழை பெய்துள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவ-லக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பபட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போது-மான அளவில், 4,564 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 45 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதேபோல், சிறுதானிய விதைகள், 20 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இயல்பான மழையளவு, 652.20 மி.மீ., நடப்பாண்டு செப்டம்பர் வரை, 347.61 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் வரை, 6,429 ெஹக்டேர் பரப்ப-ளவில், வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, ஆர்.டி.ஓ.,க்கள் முகமது பைசல், கருணாகரன் உள்-பட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.முன்னதாக, விவசாயிகள் குறைதீர் கூட்ட த்தில், பல்வேறு அரசு துறைகள் சார்பில், விவசாயிகளுக்கு, இரண்டு லட்சத்து, 24 ஆயி-ரத்து, 533 ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்-பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை