உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை

கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் இல்லை

கரூர்: க.பரமத்தி, பவித்திரம் அருகே, பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பி-ரமணிய சுவாமி கோவில் உள்ளது.அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. கரூர் மாவட்டம், மட்டுமல்ல நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்-ணமி, கார்த்திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பால மலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்-றனர்.ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை. இதனால், பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழைக்காலத்திலும், வெயில் அதிகமாக அடிக்கும்போதும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால், கோவில் அடிவார பகுதியில் உள்ள பாலமலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை