உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தான்தோன்றிமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தான்தோன்றிமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கரூர்:கரூர் தான்தோன்றிமலை கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில், பிப்., 13 ல் சிறப்பு பூஜையுடன் விழாவுக்காக பூர்வாங்க பணிகள் நடந்தது. பிப்., 15ல் வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பிப்., 16 ல் மாசிமக தெப்பத்திருவிழாவுக்காக கொடியேற்ற விழா நடந்தது. நேற்று 7-ம் நாள் பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை தேர்த் திருவிழா, 26 ல் தெப்பத்தேர் உற்சவம், 27, 29 ல் வெள்ளி கருடசேவை, வரும் மார்ச், 2 ல் ஆளும் பல்லாக்கு, 3 ல் ஊஞ்சல் உற்சவம், 4 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ