டி.என்.பி.எல்., சார்பில் கோவில் திருப்பணிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
கரூர்: கரூர் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோவில் திருப்-பணிக்கு, புகழூர் டி.என்.பி.எல்., ஆலை நிர்வாகம் சார்பில், ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன, சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆலையின் அருகில் வேட்டமங்-கலம் பஞ்சாயத்து சேமங்கி கிராமத்தில், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புதிய தேருக்கான அச்சு மற்றும் சக்கரம் செய்வதற்காக, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோ-லையை, காகித ஆலை நிறுவன பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன், கோவில் திருப்பணிக்குழு உறுப்பினர்களிடம் வழங்கினார்.