உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது

தொழிலாளியிடம் பணம் பறித்த திருநங்கை கைது

கரூர்: கரூரில், ஓட்டல் தொழிலாளியிடம் கத்தியை காட்டி, பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை கார்வாழி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 24; ஓட்டல் தொழிலாளி. இவர் கடந்த, 27ம் தேதி இரவு கரூர், 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த திரு-நங்கை ராகவி, 28; என்பவர், குணசேகரனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து, குணசேகரன் கொடுத்த புகார்படி, திருநங்கை ராக-வியை, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை