உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காரில் போதை பொருள் கடத்திய இருவர் கைது

காரில் போதை பொருள் கடத்திய இருவர் கைது

குளித்தலை, குளித்தலை எஸ்.ஐ.. சரவணகிரி தலைமையில் போலீசார், நேற்று முன்தினம் இரவு காவிரி பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாருதி எக்கோ கார், மாருதி எஸ் கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் போதை பொருட்கள் இருந்தது தெரிவந்தது.இதையடுத்து நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் கபிலர் மலையை சேர்ந்த மணிகண்டன், 24, பாண்டமங்கலம் வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன், 42, ஆகியோரை கைது செய்தனர். கார்களில் இருந்த போதை பொருட்களான ஹான்ஸ், 60 கிலோ, விமல் மசாலா, 5 கிலோ மற்றும் சாம்சங் மொபைல் 1,ஆப்பிள் ஐபோன், 1 மற்றும் 1,030 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ