உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோடை மழை துவங்கும் முன் கால்வாயை துார்வார வலியுறுத்தல்

கோடை மழை துவங்கும் முன் கால்வாயை துார்வார வலியுறுத்தல்

கரூர்: கரூர் நகரில், கோடை மழை பெய்ய துவங்கும் முன், சாக்கடை கால்வாய்களை துார் வார வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், வடகிழக்கு பருவமழை பெய்த போது, கரூர் நகர பகுதிகளான கோவை சாலை, ஜவஹர் பஜார், தின்னப்பா கார்னர் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பொதுமக்கள் சாலைகளில், கார் இருசக்கர வாகனங்-களில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கரூர் நகரில் கடந்த, 10 நாட்களாக கோடை காலத்தையொட்டி, வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, திருமாநி-லையூர், சுங்ககேட், காந்தி கிராமம், திருகாம்புலியூர், சுக்காலியூர், செல்லாண்டிப்பாளையம், தான்தோன்றிமலை, தொழிற்பேட்டை, பெரிய குளத்துப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில், லேசான சாரல் மழை பெய்தது. அதிகளவில் மழை பெய்யும் போது, சாலைகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே, கரூர் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களை துார் வார வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்து, பல மாதங்களாகிறது. மண், பிளாஸ்டிக் பொருட்-களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லை.கோடை மழை அதிகளவில் பெய்ய துவங்கும் முன், கரூர் மாந-கராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி