உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயனற்ற பொது கழிப்பிடம்: மக்கள் அவதி

பயனற்ற பொது கழிப்பிடம்: மக்கள் அவதி

கரூர்: கரூர் அருகே, பொது கழிப்பிடம் முட்புதர்கள் முளைத்து பயனற்ற நிலையில், சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கரூர் மாவட்டம், காதப்பாறை கிராம பஞ்., வெண்ணைமலை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில ஆண்டுகளுக்கு முன், 5.55 லட்ச ரூபாய் செலவில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. அதை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், அந்த கழிப்பிடம் சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது.பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யவில்லை. மேலும், கழிப்பிடத்துக்குள் நுழைய முடியாத படி அதிகளவில் முட்புதர் முளைத்துள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல், திறந்த வெளிப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வெண்ணைமலை பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்து முட்புதர்களால் சூழப்பட்டுள்ள, கழிப்பிடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு விட, காதப்பாறை பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி