மேகபாலீஸ்வரர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை
மேகபாலீஸ்வரர் கோவிலில்வளர்பிறை அஷ்டமி பூஜைகரூர், நவ. 10-நன்செய் புகழூர், மேகபாலீஸ்வரர் கோவிலில், ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமியை யொட்டி, நேற்று மாலை சிறப்பு பூஜை நடந்தது.அதில், மூலவர் கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, காலபைரவர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமியையொட்டி, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.