உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர்; மாயனுார் கதவணைக்கு, நேற்று வினாடிக்கு, 10,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது.மேட்டூர் அணை நீர்மட்டம், 107 அடியை தாண்டி-யுள்ள நிலையில், காவிரியாற்றில் வினாடிக்கு, 11,400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர், அமராவதி அணைகள் மற்றும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்-ணீரும், காவிரியாற்றில் கலக்கிறது. இதனால், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை வினாடிக்கு, 10,441 கன அடி தண்ணீர் வந்-தது. அதில், 9,921 கன அடி தண்ணீர் காவிரி-யாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்-டது. நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 6 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.94 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்-காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி