உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கரூர், ஜன. 4- அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 316 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 89.41 அடியாக இருந்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,420 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. கதவணையில் இருந்து காவிரியாற்றில், டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக வினாடிக்கு, 2,428 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில், 450 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.42 அடியாக இருந்தது.நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை