உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவையொட்டி, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கரூர் அருகே, தாதோன்றிமலை வெங்கடரம ண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. நேற்று மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. வரும், 14 ல் தெப்பத்தேர் உற்சவம், 17 ல் வெள்ளி கருடசேவை, 19 ல் ஆளும் பல்லாக்கு, 20 ல் ஊஞ்சல் உற்சவம், 21 ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !