உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

குளித்தலை, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்தம் அடுத்த, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 40. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. தனது மாமனார் ஊரான முனையம் பட்டியில் நடந்த திருவிழாவிற்காக மனைவி கடந்த, 20ம் தேதி மதியம் 2:30 மணியளவில் வந்திருந்தார். பின், வீட்டிலிருந்த கார்த்திகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தனது மனைவியை காணவில்லை என, கணவர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை