உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்ன ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

சின்ன ஆண்டாங்கோவில் தடுப்பணையில் பூங்கா அமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் அருகே, சின்ன ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவிலில், அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், தடுப்-பணை கட்டப்பட்டது. ஆற்றில் தண்ணீர் செல்லும் காலக்கட்-டத்தில், தடுப்பணை ரம்மியமாக காட்சியளிக்கும். இதனால், கரூர் டவுன், சுக்காலியூர், திருகாம்புலியூர், வெங்கமேடு, பசுபதி-பாளையம், வெள்ளியணை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு செல்கின்றனர்.ஆனால், தடுப்பணை பகுதியில் பூங்கா வசதி இல்லாததால், பொதுமக்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்று விடுகின்றனர். கரூர், க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பகு-தியில், பெரியளவில் பூங்கா வசதி இல்லை.கரூர் கொளந்தாகவுண்டனுாரில் கடந்த, 2012ல், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்க பணிகள் துவக்கப்பட்டன. தற்-போது, அந்த இடத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. நெரூரில் உள்ள சுற்றுலா பூங்கா, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுது போக்குக்காக செல்ல உரிய இடம் இல்லை.இதனால், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 2 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள, ஆண்டாங்கோவில் தடுப்பணை பகுதியில் பூங்கா அமைத்தால், கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் பயனுள்ளதாக அமையும். சின்ன ஆண்டாங்கோவில் கிராமப்பகுதிகளும், பொரு-ளாதார வளர்ச்சியடையும். இதனால், தடுப்பணை பகுதியில், காலியாக உள்ள இடத்தில், பூங்கா அமைக்க சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி-யது அவசியம்.தடுப்பணை நிரம்பியதுதிருப்பூர் மாவட் டம், அமராவதி அணையில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக, பாசனத்துக்காக முறை வைத்து, தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால், சின்ன ஆண்டாங்கோவில் தடுப்பணை, கடந்த சில நாட்களாக நிரம்பிய நிலையில் உள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொதுமக்கள் தடுப்பணைக்கு குளிக்க வந்திருந்தனர்.அப்போது, 'தடுப்பணை பகுதியில், குழந்தைகள் விளையாடும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !