உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் பூஜை

கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் பூஜை

கிருஷ்ணராயபுரம்: கிருத்திகையையொட்டி, நேற்று கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதில், முருகனுக்கு பால், தயிர், இளநீர், பழரசம், சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகள் கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ