உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆற்று மணல் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆற்று மணல் விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கரூர், வெள்ளியணை அருகே, ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த வாலிபர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவரது மகன் சூர்யா, 34; இவர், ஆற்று மணலை கடத்தி ஏமூர் புதுாரில் பதுக்கி வைத்து, விற்பனை செய்த வழக்கில் கடந்த மே, 30ல் வெள்ளியணை போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சூர்யாவை கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, சூர்யாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர், திருச்சி மத்திய சிறையில் உள்ள சூர்யாவிடம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை, வெள்ளியணை போலீசார் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை