உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்

வே.பாளையத்தில் இளைஞர் பெரு மன்ற பேரவை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட இளைஞர் பெருமன்றத்தின் பேரவை கூட்டம், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், வேலாயுதம்-பாளையத்தில் நடந்தது.அதில், டி.என்.பி.எல்., காகித ஆலையில் புகழூர் பகுதியை சுற்றி-யுள்ள, இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், கரூரில் சட்டக் கல்லுாரி அமைக்க வேண்டும், கரூரில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும், கோயம்பள்ளி-மேலப்பாளையம் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட, பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில துணை செயலாளர் வசந்த குமார், மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன், இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் நாட்ராயன் உள்-பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !