மேலும் செய்திகள்
வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் மாயம்
11-Aug-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; பிளஸ் 2 முடித்துள்ளார்; நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டில் இருந்து ஜிம்மிற்கு சென்ற சிறுவன் திரும்பி வரவில்லை. அவரது தந்தை ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.ஓசூர் ஜூஜூவாடி ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் திலிப்குமார், 29; டிரைவர். கடந்த, 1 இரவு, 9:10 மணிக்கு, ஜூஜூவாடி தனியார் லே அவுட்டில் உள்ள தன் நண்பர் மெக்கானிக் கடையில் இருந்து வீட்டிற்கு சென்றவர் மாயமானார். அவரது தங்கை தீபா, 26, கொடுத்த புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
11-Aug-2024