கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்
கி.கிரியில் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை சார்பில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய, மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், தொழிலாளர் உதவி ஆணையர் ஜெய்சங்கர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், தொழிசங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.