மேலும் செய்திகள்
பஸ் நிலைய வணிக வளாகம் ஏலம் ஒத்திவைப்பு
29-Mar-2025
மரத்தில் கார் மோதி முதியவர் பலிதளி:கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி, 74. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்; இவரும், அத்திப்பள்ளியை சேர்ந்த பிரேம்சேகர்ரெட்டி, 24, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், கும்ளாபுரம் - சாமநத்தம் சாலையில் டாடா நெக்சான் காரில் சென்றனர். பெங்களூருவை சேர்ந்த ஆஞ்சிரெட்டி, 69, என்பவர் காரை ஓட்டினார். சாமநத்தம் கிராமத்தில் மதியம், 3:00 மணிக்கு கார் சென்ற போது, சாலையோர மரத்தில் மோதியது. இதில், கிருஷ்ணாரெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரேம்சேகர் ரெட்டி மற்றும் டிரைவர் ஆஞ்சிரெட்டி ஆகியோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தளி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Mar-2025