மேலும் செய்திகள்
ஓசூர், தேன்கனிக்கோட்டையில் 850 சிலைகள் பிரதிஷ்டை
07-Sep-2024
ஓசூர்: சூளகிரி வி.ஐ.பி., நகரை சேர்ந்தவர் வினோத், 30, ஜிம் பயிற்சி-யாளர்; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் பிர-திஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை நேற்று மாலை கரைக்க, கீரனப்பள்ளி பகுதியிலுள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு இளை-ஞர்கள் கொண்டு சென்றனர். அவர்களுடன் சென்ற வினோத், சிலையை கரைக்கும் எதிர் கரையில் இருந்து நேற்று மாலை, 4:50 மணிக்கு ஆற்றுக்குள் இறங்கினார். நீச்சல் தெரியாததால் ஆழ-மான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறையினர், வினோத் சட-லத்தை மீட்டனர். உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Sep-2024