உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி : பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டடம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் குணசே-கரன் தலைமை வகித்தார். இதில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்-படுத்த வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு ஊழியர்-களை கொண்டு செயல்படுத்த வேண்டும். கருணை அடிப்படை-யிலான பணியிடங்களை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை கைவிட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, 25 சதவீத பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்-நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை சார்பில், வட்டத்தலைவர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ