உள்ளூர் செய்திகள்

ஓட்டல் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி, கர்நாடக மாநிலம், தெங்காடியூரை சேர்ந்தவர் பிரகாஷ்தபா, 36. இவர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் ஒரு ஓட்டலில் வேலை செய்தார். கடந்த, 16ல், தாளாப்பள்ளி அருகில் நடந்து சென்றபோது தவறி விழுந்தார். இதில் அவருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை