உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஆக. 23-கிருஷ்ணகிரி அருகே, தனியார் பள்ளி மாணவி, பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து, மாதர் சம்மேளனம், இளைஞர் பெருமன்றம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், கடந்த ஆக., 8 இரவு, என்.சி.சி., முகாம் நடத்துவதாக மாணவியை அழைத்துச் சென்று சிவராமன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இந்த வன்கொடுமைக்கு பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பு. மேலும், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், முழு பொறுப்பை ஏற்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்கள் எழுப்பினர்.இதில், மாதர் சங்க சம்மேளனம் தேசிய குழு உறுப்பினர் சுந்தரவள்ளி, இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் ஆதில், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நிருப் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை