உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் நிறுவன ஊழியர் சாலை விபத்தில் பலி

தனியார் நிறுவன ஊழியர் சாலை விபத்தில் பலி

அதியமான்கோட்டை: நல்லம்பள்ளி அடுத்த கடுதுகாரம்பட்டியை சேர்ந்த முனுசாமி, 41; இவர் ஓசூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 29 அன்று ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு அவருடைய ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.ஜெட்டிஹள்ளி அருகே வந்த-போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ