உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

ஓசூர்: அஞ்செட்டியில் இருந்து, சுற்றியுள்ள மலை கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால், காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவியர் கடும் சிரமப்படுகின்றனர்.குறிப்பாக, அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் அரசு பஸ்சில், நாட்றாம்பாளையம் பகுதி மாணவர்கள் படியில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் தினமும் பயணம் செய்கின்றனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவர்கள் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், காலை, மாலை நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை