உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது

கள்ளச்சாராய விற்பனை இருவர் அதிரடி கைது

ஓசூர்:கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்த மெய்யழகன், 51, காமராஜ், 29, ஆகியோரை கள்ளச்சாராயம் விற்றதாக போலீசார் நேற்று கைது செய்து, 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், கடந்தாண்டு கூட ஓரளவிற்கு கள்ளச்சாராய சோதனை நடத்தி ஊறல்களை அழித்தனர். ஆனால் நடப்பாண்டு கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த பின் தான், தற்போது கலால் போலீசார் பெயரளவிற்கு களமிறங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி