ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து1,500 கன அடியாக சரிவுஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 1,500 கன அடியாக சரிந்தது.தமிழக - கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளாக காட்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 2,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரின்றி காட்சி அளித்தன.